2018-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய சுற்றாடல் சட்டத்தைத் திருத்துதல் - இலங்கையில் சுற்றாடல் சார்ந்த சகல துறைகளையும் தேசிய மட்டத்தில் ஒருங்கிணைப்பதற்குத் தேவையான சட்ட கட்டமைப்பு 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, இந்த சட்டத்திற்குரிய பணிகளை நிறைவேற்றும் முதன்மை நிறுவனமாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தாபிக்கப்பட்டுள்ளது. காலத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு இந்த சட்டம் சில சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டிருந்த போதிலும் சுற்றாடல் சம்பந்தமாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் உட்டபட எதிர்காலத்தில் எழக்கூடுமென என எதிர்பார்க்கப்படும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகள் காண்பதற்கு இயலுமாகும் வகையில் இந்த சட்டத்தை திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, முக்கியமாக தொழிற்சாலைகளின் மூலம் நிகழும் நீர் மாசடைதல், நகர கழிவுகள் சம்பந்தமான பிரச்சினைகள், சட்டவிரோத நிருமாணிப்புகளினால் ஏற்படும் பிரச்சினைகள் போன்ற நடைமுறை மற்றும் எதிர்கால பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கு 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தை திருத்துவதற்கும் இதற்குரிய சட்டங்களை ஆக்குவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசணை வழங்குவதற்குமாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |