• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இழப்புக்கான அலுவலகத்தைத் தாபித்தல்
- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களுக்கு ஆளாதல், அரசியல்அமைதியின்மை, சிவில் குழப்பங்கள், பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் போன்ற பல்வேறுபட்ட காரணங்களினால் பாதிக்கப்பட்ட இழப்பீடு வழங்குவதற்கு பொருத்தமானவர்களை இனங்கண்டு அவர்களுக்கு இழப்பீடொன்றை வழங்கும் பணிகளை முறையாகவும் வௌிப்படைத் தன்மையாகவும் மேற்கொள்வதற்கு நட்டஈடு செலுத்தும் /இழப்புக்கான அலுவலகத்தைத் தாபிக்கும் பொருட்டு சட்டங்களை ஆக்குவதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இதன் பொருட்டு சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட இழப்புக்கான அலுவலகத்தை கூட்டிணைப்பதற்கான சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் இந்த சட்டமூலத்தை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.