• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேரே ஏரி சார்ந்த அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலும் அணை பராமரிப்பும்
- பேரே ஏரிக்கு அண்மையில் அமைந்துள்ள நிலப் பிரதேசத்தை இயற்கை அழகினை பாதுகாக்கும் விதத்தில் விருப்பத்திற்குரிய சுற்றுலா இடமொன்றாக அபிவிருத்தி செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் திட்டமிடப்பட்டுள்ளது. பேரே ஏரியைச் சுற்றி பூங்காவொன்றை நிருமாணித்தல் ஏரிக்கு அருகாமையிலுள்ள காணிகளை அபிவிருத்தி செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல் போன்ற கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் தேவை இதன்கீழ் இனங்காணப் பட்டுள்ளது. இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை செய்வதற்கு முன்னர் அணையினை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.