• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு பிரதான திட்டமொன்றைத் தயாரித்தல்
- சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விசேட பொருளாதார வலய மொன்றை அம்பாந்தோட்டையில் தாபிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதற்கு சீன அரசாங்கத்தினால் China Harbour Engineering Corporation நிறுவனம் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் கீழ் அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இலங்கை - சீன வழங்கல் மற்றும் கைத்தொழில் வலயங் களைத் தாபிப்பதற்கு உரிய பணிகள் 03 கட்டங்களின் கீழ் செய்யப் படவுள்ளன. இந்த அபிவிருத்தி பணிகளுக்கு ஒருங்கிணைவாக அம்பாந்தோட்டை பிரதேசத்தில் மிக திட்டமிடப்பட்ட நகர அபிவிருத்தி மேற்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான பிரதான திட்டமொன்றைத் தயாரிப்பது பொருத்தமானதென தீர்மானிக்கப் பட்டுள்ளது. இதன் பொருட்டு மதியுரைச் சேவை நிறுவனமொன்றை நியமிப்பதற்கும் இந்த கருத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு நோக்கத்திற்கான கருத்திட்ட முகாமைத்துவ அலகொன்றை தாபிப்பதற்கும் அதற்குத் தேவையான வசதிகளை வழங்கும் பொருட்டும் இளைஞர் அலுவல்கள், கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.