• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாடசாலை மாணவர்களுக்கு பால் பக்கட் ஒன்றை வழங்குதல்
- தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் 1 ஆம் தரத்திலிருந்து 5 ஆம் தரம் வரையிலான மாணவர்களையும் விசேட கல்வி பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களையும் தழுவும் விதத்தில் பாடசாலை மாணவர்களுக்கு காலையில் பால் பக்கட் ஒன்றை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமானது 2013 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மில்கோ தனியார் கம்பனியினால் உற்பத்தி செய்யப்படும் சந்தை பெறுமதி 30/- ரூபாவான 150 மில்லிலீற்றர் கொண்ட பால் பக்கட் ஒன்று இலங்கை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. பாடசாலை மாணவர்களின் போசாக்கு பிரச்சினையை குறைத்து செயலூக்கம் கொண்ட மாணவர் சமுதாயமொன்றை உருவாக்குவது இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, பால் பக்கட் ஒன்றின் தற்போதைய உயர் சந்தை விலைகளின் கீழும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை தடையின்றி நடாத்துவதன் முக்கியத்துவத்தை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.