• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுவர்களை சகல வகையிலான வன்முறைகளிலிருந்தும் பாதுகாத்துக் கொள்வதற்கான சம்பவ முகாமைத்துவ வழிகாட்டலை நடைமுறைப் படுத்துதல்
- இலங்கை சிறுவர் உரிமை தொடர்பிலான நியதிச் சட்டத்தில் கைச்சாத்திட்டு தற்போது இரண்டு தசாப்தங்கள் முடிவடைந்துள்ளதோடு, சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் காப்பு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சகல வகையிலுமான வன்முறை களிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்கான பணிகளை நிறைவேற்றும் போது இது தொடர்பிலான சகல உத்தியோகத்தர்களும் சிறுவர் உரிமைகள் பற்றிய மூலதத்துவத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுப்பது முக்கியமானதாகும். இதற்கமைவாக, இங்கு பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகளை குறிப்பிட்டு வழிகாட்டல் ஒன்றை "சிறுவர்களை சகல வகையிலான வன்முறை களிலிருந்தும் தடுத்துக் கொள்வதற்கான சம்பவ முகாமைத்துவ வழிகாட்டல்" என்னும் பெயரில் சிறுவர் நன்னடத்தை பாதுகாவல் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, சிறுவர்கள் பற்றி செயலாற்றும் போது இந்த வழிகாட்டல்களை தேசிய வழிகாட்டல்களாக நடைமுறைப்படுத்துவதற்கும் சகல நிருவாக மட்டத்திலும் உரிய தலைவர்களின் ஊடாக இந்த வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துவதனை கையாள்வதற்கும் மேற்பார்வை செய்வதற்குமாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.