• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெலிகம தென்னைஓலை வாடும் மற்றும் அழுகும் நோயைக் கட்டுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் பற்றி அறிக்கையிடுதல்
– தென் மாகாணத்தில் வியாபித்துள்ள வெலிகம தென்னைஓலை வாடும் மற்றும் அழுகும் நோய் காரணமாக தென்னஞ் செய்கைக்கு நேர்ந்துள்ள சேதத்தினை தடுப்பதற்காக இந்த நோய் தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தை 2018 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டுவரை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு இதற்கு முன்னர் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த கருத்திடடத்தின் கீழ் நோய்க்கு ஆளான தென்னை மரங்களை இனங்காணுதல், அப்புறப்படுத்துவதற்கு குறியிடுதல், அப்புறப்படுத்தும் தென்னை மரமொன்றுக்கு 3,000/- ரூபா வீதம் காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு செலுத்துதல், நோய் பற்றி அறியச் செய்வித்தல், மாற்று பொருளாதார பயிர்களை வழங்குதல் மற்றும் நோய் எதிர்ப்பு தென்னை வகைகளை உற்பத்தி செய்யும் வசதிகளை அபிவிருத்தி செய்தல் போன்றவை மேற்கொள்ளப் படுகின்றன. இந்த நோய் தடுப்புக் கருத்திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டினுள் நோய்க்கு ஆளான 832 தென்னை மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதெனவும் மேலும் 819 தென்னை மரங்களை அப்புறப்படுத்துவதற்கு இனங்காணப்பட்டுள்ளதெனவும் அமைச்சரவை அறிந்து கொள்ளும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.