• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசியாவில் பரஸ்பர மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டின் உறுப்புரிமையை இலங்கை பெற்றுக் கொள்தல்
– ஆசிய வலையத்தினுள் சமாதானத்தை மேம்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் நிலைபேறான தன்மை தொடர்பிலான ஒத்துழைப்பினை அதிகரிப்ப தற்கான சருவதேச சங்கமொன்றாக இந்த மாநாடானது 1992 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. இலங்கை தற்போது இந்த மாநாட்டின் கண்காணிப்பு நாடொன்றாக செயலாற்றுவதோடு, இந்தியா, சீனா, ரஸ்யா அடங்கலாக 26 நாடுகள் இந்த மாநாட்டில் உறுப்புரிமையை இதுவரை பெற்றுக் கொண்டுள்ளன. இந்த மாநாட்டில் தற்போது தலைமை வகிக்கும் சீனா இதில் முழுமையான உறுப்புரிமையினை பெற்றுக் கொள்ளுமாறு இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, இதன் மூலம் உறுப்பு நாடுகளுடனான செயற்பாடுகளை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கு இலங்கைக்கு வாய்ப்பு கிடைக்கப்பெறும். இதற்கமைவாக ஆசியாவில் பரஸ்பர மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டின் உறுப்புரிமையை இலங்கை பெற்றுக் கொள்ளும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.