• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுவர்களுக்கான பகற் பராமரிப்பு வசதிகளை விரிவுபடுத்துதலும் மேம்படுத்துதலும்
- சிறுவர்களுக்கான பகற் பராமரிப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமாக நடவடிக்கை எடுக்கும் தேவை சம்பந்தமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் இதற்கு முன்னர் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதோடு, இதற்கு தேவையான சிபாரிசுகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு இந்த துறைக்கு உரியதாக செயலாற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை கொண்ட குழுவொன்று அமைச்சரவையினால் பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக உரிய தரப்பினருக்கு உடன்பாட்டுடன் சிறுவர்களுக்கான பராமரிப்பு சேவைகள் வழங்குபவர்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி (NVQ) மட்டத்திலான தொழிற்பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல், தற்போது நிலவும் அரசாங்கத்தின் கடன் திட்டத்தின் ஊடாக மென் கடன் வசதிகளை வழங்குவதன் மூலம் சிறுவர் பராமரிப்பு பாடநெறிகளை கற்பதற்கு இளைஞர்களை ஊக்குவித்தல், பயிற்சி பெற்ற இளைஞர் யுவதிகளுக்கு பகற் பராமரிப்பு நிலையங்களை தாபிப்பதற்கு 02 மில்லியன் ரூபா வரையிலான சலுகை கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.