2018-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆரம்ப சுகாதார பாதுகாப்பு முறைமையினை பலப்படுத்தும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதிப் பெற்றுக் கொள்ளல் - ஆரம்ப சுகாதார பாதுகாப்பு சேவைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி இலங்கையில் சுகாதார பாதுகாப்பு முறைமையினை பலப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார பாதுகாப்பு முறைமையை பலப்படுத்தும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு உலக வங்கியின் மீள் கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சருவதேச வங்கியுடன் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 5 1/2 வருட காலப்பகுதிக்குள் இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் 06 வருட சலுகை காலத்துடன் 33 வருடங்களில் இந்த கடன் தொகையை செலுத்துவதற்கும் உடன்பாடு காணப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. |