• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் சருவதேச வர்த்தகம் தொடர்பிலான சமவாயத்தின் (CITES) 18 ஆவது சருவதேச தரப்பினர்களின் மாநாட்டிற்கு அனுசரணை வழங்குதல்
- அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் சருவதேச வர்த்தகம் தொடர்பிலான சமவாயத்தின் (CITES) 18 ஆவது சருவதேச தரப்பினர்களின் மாநாட்டை 2019 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதியிலிருந்து யூன் மாதம் 03 ஆம் திகதிவரை இலங்கையில் நடாத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டை ஒழுங்கு செய்வதற்கான பொறுப்பானது முன்னாள் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ள போதிலும் 2018 03 28 ஆம் திகதியிடப்பட்ட 2064/26 ஆம் இலக்கமிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இது பின்னர் புத்தசாசன அமைச்சுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் சருவதேச வர்த்தகம் தொடர்பிலான சமவாய செயலகத்துடன் கைச்சாத்திடப்படவுள்ள, இலங்கையில் இம்மாநாட்டை நடாத்துவது பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் சார்பில் கைச்சாத்திடும் பொருட்டு புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.