2018-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கிராமிய பாலங்கள் கருத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட எதிர்பாரா செலவினங்களின் சேமிப்பை பயன்மிக்கவாறு பயன்படுத்திக் கொள்ளல் - கிராமிய பிரதேசங்களிலுள்ள பாலங்களை நிருமாணிப்பதற்காகவும் ஒதுக்கப்பட்ட எதிர்பாரா செலவினங்களின் சேமிப்பை பயன்படுத்தி மூல ஒப்பந்த உடன்படிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதே வீதங்களில் 35 கிராமிய பாலங்களை நிருமாணிப்பதற்கும் ஒவ்வொரு மாகாணம் சார்பிலும் 36 மீற்றர் நீளம் கொண்ட தற்காலிக பாலங்களை நிருமாணிப்பதற்காகவும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் முன்னர் பிரேரிக்கப்பட்டுள்ளவாறு மாகாண மட்டத்திலான 09 தற்காலிக பாலங்களுக்குப் பதிலாக மிக அத்தியாவசியமான வௌ்ளத்தினால் பாதிக்கப்படும் தெரிவு செய்யப்பட்ட அமைவிடங்களில் 15 மேலதிக பாலங்களை நிருமாணித்தல் மிக பொருத்தமுடையதாக இருக்கும் என தேசிய வழிப்படுத்தல் குழுக்கூட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, மாகாண மட்டத்திலான 09 தற்காலிக பாலங்களை நிருமாணிப்பதற்கு பதிலாக மிக அத்தியாவசியமான வௌ்ளத்தினால் பாதிக்கப்படும் அமைவிடங்களில் 15 உருக்கு பாலங்களை நிருமாணிக்கும் பொருட்டு மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |