2018-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தடயவியல் கணக்காய்வு / புலனாய்வுகளுக்காக சருவதேச தடயவியல் கணக்காய்வு நிறுவனம் / நிறுவனங்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்தல் - மத்திய வங்கி திறைசேரி முறிகளின் வௌியீட்டில் புரியப்பட்டுள்ளதாக சொல்லப்படும் குற்றஞ்சாட்டப்பட்ட முறைக்கேடுகளை புலனாய்வு செய்யும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவினால் அதன் புலனாய்விற்குப் பின்னராக அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் வெவ்வேறுபட்ட தடயவியல் கணக்காய்வுகளை நடாத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் மிகச்சிறந்த செயற்றிறனையும் நிபுணத்துவத்தையும் கொண்ட சுயாதீன நிறுவனம் / நிறுவனங்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கிணங்க, பொருத்தமான கணக்காய்வு நிறுவனமொன்றை தெரிவு செய்வதற்கென மதியுரை கொள்வனவுக் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |