2018-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொதுமக்களுக்கு துரிதமாக உறுதிகளை வழங்குவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் - சகல பிரசைகளுக்கும் காணி உரிமைத்துவத்தை வழங்கும் தேசிய கொள்கைக்கு அமைவாக, அரசாங்க காணிகளில் வசிக்கும் மக்களுக்கு 1 மில்லியன் அனுமதிப்பத்திரங்களை / கொடைப்பத்திரங்களை விநியோகிப்பதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்டதன் கீ்ழ்வரும் பிரதான நிகழ்ச்சித்திட்டங்களானவை பொலன்நறுவை, மொனராகலை, காலி மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு மே மாதம் முதல் திசெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் மீதமுள்ள 21 மாவட்டங்களுக்கும் உரியதாக பிரதான நிகழ்ச்சித்திட்டங்களையும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரதேச மட்டத்தில் 03 நிகழ்ச்சித்திட்டங்களையும் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை சகல மாவட்டங்களிலும் பிரதேச மட்டத்திலும் நடைமுறைப்படுத்துவதற்காக திறைசேரியிலிருந்து மேலதிக நிதியங்களை காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்திற்கு குறித்தொதுக்கும் பொருட்டு காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |