2018-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வியாபார நடவடிக்கைகளை இலகுபடுத்தும் சுட்டியை மேம்படுத்துவதற்காக ஒற்றைச்சாளர முறையை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக சுங்க கட்டளைச் சட்டத்தை திருத்துதல் - இலங்கையில் வியாபார மற்றும் முதலீட்டு நிலைமைகளை மேம்படுத்துவதற்கு வியாபார செயற்பாட்டின் வினைத்திறன் மற்றும் எளிமை என்பவற்றை மேம்படுத்துவது அத்தியாவசியமானதோடு, இதன் பொருட்டு பொருட்களை நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு முன்னர் இசைவாக்கம் மற்றும் ஆவணமற்ற சுங்க செயற்பாட்டினை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் சுங்க இசைவாக்கப் பணிகளின் போது வர்த்தகர்களுக்கு ஏற்கவேண்டி வருகின்ற செலவு மற்றும் காலம் குறைவடைவதோடு, வியாபார நடவடிக்கைகளை இலகுபடுத்தும் சுட்டியில் இலங்கைக்குரிய இடம் மேலே செல்லும்.
இதற்கான ஏற்பாடுகளைச் செய்து சுங்க கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு பிரேிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சுங்க கட்டளைச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய உத்தேச திருத்தங்களை வரைவதற்காக சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |