• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கலமெட்டிய கடற்றொழில் துறைமுக நிருமாணிப்பின் மூலம் பாதிக்கப்பட்ட கரையோர மீன்பிடி கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- கலமெட்டிய கடற்றொழில் துறைமுகம் மற்றும் நீர் அணை என்பவற்றின் நிருமாணிப்பு காரணமாக இந்தப் பிரதேசத்தில் மரபுவழி கரையோர மீன்பிடி தொழிலுக்கு இடையூறு ஏற்பட்டதோடு, இதனால் 28 கரையோர மீன்பிடி தொழிலாளர்களுக்கும் அவர்களில் தங்கி வாழ்ந்த 644 பேர்களுக்கும் பிரதிகூலமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த கரையோர கடற்றொழிலாளர்களுக்கு கணிசமான அளவு வருடாந்த வருமானமானது இல்லாமற் போயுள்ளதென இனங்காணப்பட்டுள்ளது. இதன் சார்பில் பணரீதியாக நட்டஈடு செலுத்துவதற்குப் பதிலாக இந்த 28 கரையோர கடற்றொழிலாளர்கள் சார்பில் ஒன்று 7.8 மில்லியன் ரூபாவில் 36 அடி நீளமான பல்தின படகொன்றை வழங்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த கரையோர கடற்றொழிலாளர்கள் 28 பேருக்கும் தனித்தனியாக 36 ஆடி நீளமான பல்தின கடற்றொழில் படகுகளை வழங்குவதற்கும் இந்த கடற்றொழில் படகிற்கான செலவின் 50 சதவீதத்தை அரசாங்கத்தினால் ஏற்பதற்குமாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.