2018-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்திற்கான யப்பானிய நன்கொடை உதவி - அரசாங்க துறைசார்ந்த நிறைவேற்று உத்தியோகத்தர்களுக்கு யப்பானில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்பின் படிப்பு பாடநெறிகளை கற்கும் வாய்ப்பினை வழங்குவதற்காக 2010 ஆம் ஆண்டில் மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான யப்பான் உதவி நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு பணிக் கட்டமைப்பின் கீழ் இதுவரை 135 உத்தியோகத்தர்களுக்கு இதன் ஊடாக கற்கும் வாய்ப்பு உரித்தாகியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த நிகழ்ச்சித்திட்டத்தை எதிர்வரும் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக நடாத்திச் செல்வதற்கு யப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதன்கீழ் ஒவ்வொரு ஆண்டிலும் 15 பட்டப்பின் படிப்பு புலமைப்பரிசில்களும் இரண்டு கலாநிதி புலமைப்பரிசில்களும் எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் வழங்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, உத்தேச மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 265 மில்லியன் யப்பான் யென்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |