• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நடுத்தர வருமானம் பெறும் வீடமைப்புக் கடன் திட்டம் தொடர்பில் 2018 வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துதல்
- வீடொன்றினை முதற்தடவையாக கொள்வனவு செய்யும் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை என்பவற்றின் ஊடாக செயற்படுத்தப்படும் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கான வீடமைப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களின் ஊடாக வீடொன்றினை பெற்றுக் கொள்வதற்கு உதவும் நோக்கில் "நடுத்தர வருமானம் பெறும் வீடமைப்பு கடன் திட்டம்" 2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்பொன்றுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. போதுமான காணிகளை பெற்றுக் கொள்வதில் காணப்படும் இடையூறு மற்றும் நிருமாணிப்பு கால தாமதம் என்பன காரணமாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வீடமைப்புக் கருத்திட்டங்களின் மூலம் வீட்டுக் கோரிக்கைகளை துரிதமாக பூர்த்தி செய்வது கடினமானதென இனங்காணப்பட்டுள்ளது.

ஆதலால், வீடொன்றினை முதற்தடவையாக கொள்வனவு செய்யும் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு தனியார் துறையின் ஊடாக செயற்படுத்தப்படும் வீடமைப்புக் கருத்திட்டங்களிலிருந்து வீடுகளை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு அளித்து இந்த வீடமைப்புக் கடன் திட்டத்தை விரிவுபடுத்தும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.