• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கும் "சுரக்‌ஷா" சுகாதார காப்புறுதி திட்டத்தை 2018/2019 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துதல்
- 2017 வரவுசெலவுத்திட்ட முன் மொழிவுகளுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள "சுரக்‌ஷா" சுகாதார காப்புறுதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 5 வயது தொடக்கம் 19 வயது வரையிலான பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு காப்புறுதி திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதன்மூலம் ஒவ்வொரு பிள்ளைக்கும் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதி மிக்க காப்புறுதி காப்பீடொன்று வழங்கப்பட்டுள்ளது. இதன் கீழ், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதன் சார்பில் ஒரு இலட்சம் ரூபாவும் வௌி நோயாளர் சேவை சார்பில் 10,000/- ரூபாவும் வழங்கப்படும். இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினால் இந்த காப்புறுதி காப்பீட்டு கதிட்டமானது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 2018/2019 ஆண்டு சாரபில் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வரவுசெலவுத்திட்ட நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, இந்த காப்புறுதி காப்பீட்டு திட்டத்தை 2018/2019 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்காக பொருத்தமான காப்புறுதி நிறுவனமொன்றை தெரிவுசெய்வது சம்பந்தமாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இதற்காக அரசாங்க காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து பிரேரிப்புகளை கோருவதற்கும் பாடசாலை பிள்ளைகளுக்கு கூடிய நலன் வழங்கும் காப்புறுதி நிறுவனமொன்றை தெரிவுசெய்வதற்கும் தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.