• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் கப்பலோடிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை அங்கீகரித்தல் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ள
- தேர்ச்சி சான்றிதழுடனான கப்பலோடிகளுக்கு வௌிநாட்டு கொடியொன்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பலொன்றில் சேவையாற்றுவதற்கு இந்த தேர்ச்சி சான்றிதழுக்கு (Certificate of Competency) மேலதிகமாக உரிய கப்பல் பதிவு செய்யப்பட்டுள்ள நாட்டினால் வழங்கப்படும் இதற்கு சமமான நிலையிலான சான்றிதழொன்றை (Certificate of Recognition) பெற்றுக் கொள்வது அவசியமானதாகும். இத்தகைய சமநிலையிலான சான்றிதழினை வழங்குவதற்கு உரிய நாடுகளுக்கிடையில் சமவாயமொன்றோ அல்லது புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றோ செய்து கொள்ளப்பட்டிருக்க வேண்டுமென்பதோடு, இலங்கை ஏற்கனவே 32 வௌிநாடுகளுடன் இத்தகைய உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய உடன்படிக்கைகளை செய்து கொள்வதன் மூலம் தேர்ச்சி சான்றிதழொன்றைக் கொண்டுள்ள பெரும்பாலான இலங்கை கப்பலோடிகளுக்கு வௌிநாடுகளிலுள்ள கப்பல்களில் சேவைப்புரிவதற்கான தொழில் வாய்ப்பு கிடைக்கப் பெரும். இந்த சான்றிதழ்களை வழங்குவது சம்பந்தமாக இலங்கையுடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் சமுத்திர தேர்ச்சி சான்றிதழை அங்கிகரித்தல் சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.