• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய பத்திரிகை பேரவைகளின் ஒத்துழைப்பு மாநாட்டை (Co-operative Conference on Asia Press Councils) இலங்கையில் நடாத்துதல்
- நாட்டில் சிறந்த ஊடக கலாசாரமொன்றை கட்டியெழுப்பும் நோக்கில் பல்வேறுபட்ட அறிவூட்டல்கள், செயலமர்வுகள் மற்றும் மாநாடுகளை நடாத்துவதற்கும் ஊடக சுதந்திர மற்றும் பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் இலங்கை பத்திரிகை பேரவையினால் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஆசிய வலய நாடுகளில் பத்திரிகை பேரவைகளுக்கும் ஊடக சபைகளுக்கும் இடையில் ஒத்துழைப்பினை மேம்படுத்துதல், உலகளாவிய போக்கின்பால் புரிந்துணர்வினை ஏற்படுத்திக் கொள்தல், நாட்டின் உழைக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் பயிலுநர் ஊடகவியலாளர்களை பயிற்றுவித்தல் போன்றவற்றுக்கு வசதியினை ஏற்படுத்திக் கொள்தல் போன்ற நன்மைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, ஆசிய பத்திரிகை பேரவைகளின் ஒத்துழைப்பு மாநாட்டை (Co-operative Conference on Asia Press Councils) இலங்கையில் நடாத்துவதற்கு அனுசரணை வழங்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, இந்த மாநாட்டை 2018 ஒக்றோபர் மாதத்தில் இலங்கை பத்திரிகை பேரவையின் ஏற்பாட்டில் இலங்கையில் நடாத்துவதற்கான அனுசரணை வழங்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.