2018-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கும் ருவண்டாவுக்கும் இடையில் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ள - இராணுவ ஒத்துழைப்பினை மேம்படுத்திக் கொள்தல் , அதற்கான வசதிகளை ஏற்பாடு செய்தல், ஊக்குவித்தல் அதேபோன்று இரு தரப்புக்கும் இடையில் பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பினை மேம்படுத்தி உரிய மேம்பாட்டிற்கான கட்டமைப்பொன்றை தயாரிக்கும் நோக்கில் பாதுகாப்பு மற்றும் காப்புநிலை சம்பந்தமாக இலங்கைக்கும் ருவண்டாவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |