• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஒருங்கிணைவாக பேரூந்துக் கட்டணங்களைத் திருத்துதல்
- 2018‑05‑11 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஒருங்கிணைவாக பேரூந்துக் கட்டணங்களைத் திருத்துமாறு பேரூந்து சங்கங்களினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக ஆராய்ந்த பேரூந்து கட்டண கொள்கைகளை திருத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் உத்தியோகத்தர்கள் குழுவினால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சிபாரிசினையும் ஒவ்வொரு ஆண்டும் யூலை மாதத்தில் பேரூந்து கட்டணங்களை திருத்துவது பற்றியும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பேரூந்துக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டிய விதம் சம்பந்தமான சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, 2018‑05‑16 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக ஆகக்குறைந்த பேரூந்து கட்டணத்தை 10/- ரூபாவாக இருக்கும் விதத்திலும் ஏனைய பேரூந்துக் கட்டணங்களை 6.56 சதவீதத்தால் அதிகரிக்கும் பொருட்டும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.