• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மண்ணெண்ணெய் மானியம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்
- 2018‑05‑09 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் பெற்றோலிய உற்பத்திகளுக்கான விலை சூத்திரத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதோடு, இதன் காரணமாக நிகழும் எரிபொருள் விலை அதிகரிப்பினால் பாதிப்பிற்குள்ளாகும் மின்சார வசதியற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் சிறிய அளவிலான இயந்திர படகுகளைப் பயன்படுத்தும் கடற்றொழில் சமூகத்திற்கும் மண்ணெண்ணெய் மானியம் வழங்குவது சம்பந்தமான நிகழ்ச்சித்திட்டமொன்றை பயன்படுத்துமாறு உரிய நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கமைவாக, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மண்ணெண்ணெய் விலை அதிகரித்த அளவுக்கு அமைவாக இதுவரை செயற்படுத்தப்பட்டவாறு மண்ணெண்ணெய் சார்பிலான மானியத்தினை தொடர்ந்தும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.