• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வௌ்ளமன்கர கடற்றொழில் துறைமுகத்தை நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை வழங்குதல்
- கடற்றொழிலில் ஈடுபடும் 40 - 60 அளவிலான படகுகளுக்குத் தேவையான சகல சேவைகளையும் வசதிகளையும் வழங்கும் பொருட்டு 4 மீற்றர் ஆளம் கொண்டதும் 700 மீற்றர் நீளம் கொண்டதுமான இரண்டு அலைதாங்கி சுவர்களை வௌ்ளமன்கர கடற்றொழில் துறைமுகத்தில் நிருமாணிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கடற்றொழில் துறைமுகத்தை நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 1,862.25 மில்லியன் ரூபாவுக்கு M/s. R.R. Construction (Pvt) Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு முன்னாள் கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பானது இது தொடர்பில் தற்போதைய கடற்றொழில், நீரகவளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் தெரிவிக்கப்பட்ட உடன்பாட்டினையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.