• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை 220/132kV நெய்யறி உப மின்நிலைய நிர்மாணம் மற்றும் ஏற்கனவேயிருக்கின்ற நெய்யறி உப மின்நிலைய மேம்பாடு
- பசுமை சக்தி அபிவிருத்தி மற்றும் மின்சக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 220/132kV அம்பாந்தோட்டை நெய்யறி உப மின்நிலைய நிர்மாணம் மற்றும் ஏற்கனவேயிருக்கின்ற 132/33kV அம்பாந்தோட்டை நெய்யறி உப மின்நிலைய மேம்பாடு தொடர்பிலான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 1,866.3 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Chint Electric Co. Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.