2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
முழங்காவில் நீர் வழங்கல் திட்டத்தை நிருமாணித்த - முழங்காவில் நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் பிரதேசத்தில் குடியிருக்கும் அண்ணளவாக பத்தாயிரம் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நீர் வழங்கல் திட்டத்தின் நிருமாணிப்பு ஒப்பந்தத்தை அமைச்சரவை யினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 608.49 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s, Ceylex Engineering (Pvt) Ltd., மற்றும் Prathibha Industries Limited கூட்டுத்தொழில் முயற்சிக்கு வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |