2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் வருகைத்தரும் முனையத்தில் பணம் மாற்றும் கருமபீடங்களை நடாத்தி செல்வதற்கு அங்கீகாரமளித்தல் - கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் இலங்கை சுங்க நடவடிக்கைகள் நடாத்திச் செல்லப்படும் பிரதேசத்துக்கு அப்பால் அமைந்துள்ள வருகைத்தரும் முனையத்தில் பணம் மாற்றும் கருமபீடங்களை நடாத்தி செல்வதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கொமர்ஷல் பேங் ஒப் சிலோன் பிஎல்சி, சம்பத் வங்கி பிஎல்சி, தோமஸ் குக் லங்கா பிறைவட் லிமிட்டட், இலங்கை வங்கி, மக்கள் வங்கி ஆகிய நிதி நிறுவனங்களுக்கு வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |