2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மன்னார் மாவட்டத்தில் 2018 மீலாதுன் நபி விழாவினை முன்னிட்டு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் - 2018 ஆம் ஆண்டில் தேசிய மீலாதுன் நபி விழாவின் பிரதான நிகழ்ச்சியினை நடாத்துவதற்கு மன்னார் மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, இதன் பிரதான விழா முஸ்லிம் தேசிய பாடசாலையில் நடாத்தப்படவுள்ளது. நீண்டகாலமாக நலன்புரி முகாம்களில் இடம்பெயர்ந்து மீண்டும் தமது கிராமங்களில் குடியமர்த்தப்பட்ட முஸ்லிம் மக்களின் பொதுத் தேவைகளையும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்தி செய்யும் பொருட்டு இந்த விழாவுக்கு ஒருங்கிணைவாக மேற்கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை நடைமுறைப்படுத்துவதன் சார்பில் மத்திய அரசாங்கத்தினதும் வடக்கு மாகாண சபையினதும் ஏனைய நிறுவனங்களினதும் முனைப்பான பங்களிப்பினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |