2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை சமூக பாதுகாப்பு சபைக்கான கேட்போர் கூடமொன்றை நிருமாணித்தல் - அரசாங்க சேவையில் ஓய்வூதியம் பெறாதவர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு நலன்களை வழங்கும் நோக்கில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையானது இயங்குகின்றது. இந்த நிறுவனத்தின் பணிகளை மேம்படுத்தும் போது பிராந்திய உத்தியோகத்தர்களை பயிற்றுவித்தல் மாநாடுகளை நடாத்துதல் போன்ற நோக்கங்களுக்காக கேட்போர் கூடமொன்று இருக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் பிரதான அலுவலகக் கட்டடத்தின் மேல் மாடியை கேட்போர் கூடமொன்றாக விருத்தி செய்யும் பொருட்டு தேவையான நிதியினை ஏற்பாடு செய்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |