2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சருவதேச தேரவாத பௌத்த பல்கலைக்கழக சங்கத்தின் ஐந்தாவது சருவதேச மாநாட்டினை நடாத்துதலும் அனுசரணை வழங்குதலும் - பாளி சமய நூல்களில் உள்ள பௌத்த தர்மத்தினை அறிந்து கொள்தல், அதனை பின்பற்றுதல் என்பன பொருட்டு மாணவ சமூகத்திற்கு கல்வியினை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தினையும் இணைத்துக் கொண்டு சருவதேச ஒருங்கிணைப்பு அமைப்பாக சருவதேச தேரவாத பௌத்த பல்கலைக்கழக சங்கம் செயற்படுகின்றது. இந்த சங்கத்தின் ஐந்தாவது சருவதேச மாநாட்டினை 2018 நவெம்பர் மாதம் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் அநுராதபுரத்தை மையப்படுத்தி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, சருவதேச தேரவாத பௌத்த பல்கலைக்கழகத்தின் தலைமையிலும் இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் பங்குபற்றுதலுடனும் இந்த மாநாட்டை இலங்கையில் நடாத்தும் பொருட்டு அனுசரணையை வழங்குவதற்கு உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |