2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மன்னார் காற்று சக்தி மூல மின் உற்பத்தி நிலையத்தினை நிருமாணிக்கும் கருத்திட்டம் - தற்போது மின்சார உற்பத்தியின் பொருட்டு மாற்று மூலவளங்களின்பால் உலகத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதோடு, மீள் புதுப்பிக்கத்தக்க எரிபொருள் மூலம் மின்சார உற்பத்தி செய்தலானது செலவு கூடிய சுற்றாடல் ரீதியில் பிரதிகூலமான பணியொன்றாக மாறியுள்ளது. காற்று சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதும் இதன் காரணமாக உலகம் முழுவதும் விரிவடைந்து வருகின்றது. இந்து சமுத்திரத்தைச் சுற்றி தீவுகள் இருப்பதன் காரணமாகவும் காற்று செல்லும் வலயத்தில் இருப்பதன் காரணமாகவும் காற்று சக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு போதுமான அளவு காற்று இலங்கையில் கிடைக்கும்.
பாரிய அளவிலான காற்று சக்தி மூலம் மின் உற்பத்தி நிலையங்களை நடைமுறைப்படுத்தும் போது காற்று சக்தி பூங்காக்களாக அபிவிருத்தி செய்வதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்ததோடு, இதன் ஆரம்ப நடவடிக்கையாக மன்னார் தீவில் 100 மெகாவொட் ஆற்றலுடைய காற்று சக்தி பூங்காவொன்றை நிருமாணிப்பதற்குத் தேவையான ஆரம்ப நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. இதற்குத் தேவையான நிதி ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படவுள்ளது. இதற்கமைவாக, தேவையான ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளுடன் மன்னார் தீவில் 100 மெகாவொட் ஆற்றல் கொண்ட காற்று சக்தி பூங்காவொன்றை நிருமாணிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |