• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹொரண 'சொரணவத்த' என்னும் காணியை நடுத்தர வீடமைப்பு கருத்திட்டமொன்றுக்காக பயன்படுத்துதல்
- வெலிகட சிறைச்சாலை மற்றும் அதற்குரிய நிறுவனங்களை இடம் நகர்த்துவதற்காக ஹொரண பிரதேசத்திலுள்ள 'சொரணவத்த' என்னும் காணியை பயன் படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பிரதேசவாழ் பொதுமக்களினதும் அரசியல் தலைவர்களினதும் கோரிக்கையின் மத்தியில் இந்த பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக வெலிகட சிறைச்சாலையை இடம் நகர்த்துவதற்கு வேறு பொருத்தமான காணியொன்றை இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆதலால், ஹொரண 'சொரணவத்த' என்னும் காணியை நடுத்தர வீடமைப்பு கருத்திட்டமொன்றையும் அதுசார்ந்த வசதிகளையும் விருத்தி செய்வதற்காக பயன்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.