2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கடல் துறை அபிவிருத்தியின் பொருட்டில் இலங்கைக்கும் கொரியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடுதல் - கடல் துறை அபிவிருத்தியின் பொருட்டிலான தொழினுட்ப தகவல்களை இரு நாடுகளுக்கும் இடையில் பரிமாறிக் கொள்ளும் நோக்கில் இலங்கையின் துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சுக்கும் கொரிய குடியரசின் கடல் மற்றும் கடற்றொழில் அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |