• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தாபித்தல்
– எதிர்கால சந்ததியினருக்கு இலங்கையின் இசை வரலாற்று அடையாளச் சின்னமாக அறியப்படும் அமரர் கலாநிதி பண்டிதர் டபிள்யு.டி.அமரதேவ அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட இசைக் கலாசாரத்தை பேணி பாதுகாக்கும் பொருட்டு, பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் 'அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி நிலையம்' எனும் பெயரில் நிறுவனமொன்றை, அவருக்கு மதிப்பளிக்கும் விதத்தில் அதனை தேசிய மரபுரிமையாக கருதி, தாபிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் வரையப்பட்ட அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வரைவுச் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொருட்டும் அதன்பின்னர் அதனை பாராளுமன்றத்தில் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கும் பொருட்டும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.