• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆரம்ப சுகாதார பாதுகாப்பு முறைமையினை பலப்படுத்தும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதியங்களைப் பெற்றுக் கொள்தல்
– சுகாதார பாதுகாப்பு முறைமையின் உயர் தரம் மற்றும் வினைத்திறன் காரணமாக, பல்வேறுபட்ட சுகாதார பாதுகாப்பு குறிகாட்டிகளில் திருப்திகரமான நியமங்களை அடைந்து கொள்வது இலங்கைக்கு சாத்தியப்பாடாக இருந்துள்ளது. எவ்வாறாயினும், தொற்றா நோய்களினாலும் அதேபோன்று தொற்று நோய்களினாலும் நேரிடும் இறப்புக்களின் எண்ணிக்கையிலான அதிகரிப்பில் புதிய போக்கொன்று தோற்றம் பெற்றுள்ளது. படிப்படியாக அதிகரித்துவரும் முதியோர் சனத்தொகைக்காக சுகாதார வசதிகளை ஏற்பாடு செய்வதற்கான தேவையும் எழுந்துள்ளது. ஆதலால், இலங்கை ஆரம்ப மருத்துவ பாதுகாப்பு முறைமையினை பலப்படுத்துதலானது அத்தியாவசியமான காரணியாக மாறியுள்ளது.

அதற்கிணங்க, ஆரம்ப சுகாதார பாதுகாப்பு முறைமையினை பலப்படுத்துவதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நோக்கத்திற்குத் தேவையான 200.0 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியுடன் இணைந்த நிறுவனமொன்றாக புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி சருவதேச வங்கியானது இணங்கியுள்ளது. ஆதலால், இக்கடனைப் பெற்றுக் கொள்வதற்கு இந்த வங்கியுடன் நிதி உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.