• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Glyphosate பாவனையின் தாக்கம் பற்றிய நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தல்
- களைக் கொல்லியொன்றாக Glyphosate பாவனையை இலங்கையில் தடைசெய்வதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் விளைவாக நாட்டின் பெருந்தோட்டத் துறைக்கு ஏற்பட்டுள்ள பிரதிகூலமான தாக்கத்தினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, வரையறுக்கப்பட்ட நிலைமையின் கீழ் பெருந்தோட்டத்துறைக்கு மாத்திரம் Glyphosate பாவனைக்கு இடமளிப்பது சம்பந்தமாக ஆராய்வதற்கு நிபுணர்களைக் கொண்ட உத்தியோகத்தர்கள் குழுவொன்று அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் சிபாரிசின் பிரகாரம் அளவுக்கதிகமான பாவனை, முறையற்றப் பாவனை, மற்றும் நீர்மூலவளங்களுக்கு செல்வதைத் தடுத்தல் போன்றவற்றுக்கு முறையான மேற்பார்வை பொறிமுறையொன்றை தாபிப்பதற்கு உட்பட்டு, கடும் கட்டுப்பாட்டின் கீழ் தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகளுக்காக மாத்திரம் 36 மாத காலப்பகுதிக்கு Glyphosate பாவனைக்கு இடமளிப்பதற்கு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.