• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க துறையின் வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டம்
- அரசாங்க நிதி முகாமைத்துவம் சம்பந்தமாக செயலாற்றும் அரசாங்க நிறுவனங்களை பலப்படுத்துவதற்கும் அவற்றின் ஆற்றல்களை விருத்தி செய்யும் பொருட்டும் 10 மில்லியன் யூரோக்கள் கொண்ட மானியமொன்றை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாடு தெரிவித்துள்ளதோடு, இந்த தொகையினைப் பெற்றுக் கொள்வது சம்பந்தமான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உரிய மானிய உடன்படிக்கையினைச் செய்து கொள்வதற்கும் இதற்காக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கைச்சாத்திடுவதற்கு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளருக்கு அதிகாரத்தினைக் கையளிப்பதற்குமாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.