• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யப்பான் அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் சீன அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து 03 திரவ இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையங்களைத் தாபித்தல்
- அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு என்னும் அடிப்படையில் 03 திரவ இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையங்களை இந்நாட்டில் தாபிப்பதற்கு அனுசரணை வழங்குவதற்கு சீனா, யப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. 2021 ஆம் ஆண்டின் பின்னர் நாட்டின் சக்தி தேவையில் ஏற்படும் அதிகரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தேசிய பொருளாதார சபையின் சிபாரிசின் பிரகாரம் சீன அரசாங்கத்துடன் இணைந்து அம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் 400 மெகாவொட் இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையமொன்றையும் யப்பான் அரசாங்கத்துடன் இணைந்து 500 மெகாவொட் இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையமொன்றையும் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து 500 மெகாவொட் இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையமொன்றையும் நிருமாணிப்பதற்குத் தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.