2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய இயந்திரசாதன நிறுவனத்தை பலப்படுத்துதல் - நிருமாணத்துறைக்குத் தேவையான இயந்திரசாதனங்கள் தொடர்பில் நிலவிய பற்றாக்குறைக்கு மாற்று வழியொன்றாக பிராந்திய அபிவிருத்தி கருத்திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான இயந்திர சாதனங்களை வழங்கும் பொருட்டு 1992 ஆம் ஆண்டில் தேசிய இயந்திரசாதன நிறுவனமானது தாபிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் வர்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்குத் தேவையான மூலதனத்தை பெற்றுக் கொள்ளும் பொருட்டு திறைசேரி உத்தரவாதமொன்றின் மீது கடன் தொகையொன்றை பெற்றுக் கொள்ளும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |