• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெண்கள் தொழில்முயற்சி நிதி உதவி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- பெண் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முக்கித்துவத்தை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு "பெண்கள் தொழில்முயற்சி நிதி உதவி நிகழ்ச்சித்திட்டம்" என்னும் பெயரில் கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்குவதற்கு உடன்பட்டுள்ள நிதி உதவியினை பயன்படுத்தி ஏற்கனவே செயற்படுத்தப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் கடன் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு இதன் கீழ் கடன் வழங்குவதற்கும் பெறப்படும் கடன் தொகையிலிருந்து 20-30 சதவீதத்திற்கு இடைப்பட்ட அளவு மீள செலுத்த தேவையற்ற உதவித் தொகையொன்றாக வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

I. விண்ணப்பிக்கும் கடன் தொகையானது 750,000/- ரூபா அல்லது அதனைவிட கூடுதலாக இருத்தல் அத்துடன் உரிய வர்த்தக நிறுவனத்தின் உரிமையும் 51 சதவீதம் அல்லது அதற்கு மேல் பெண்களுக்கு உரியதாக இருத்தல்.
அல்லது
II. விண்ணப்பிக்கும் கடன் தொகையானது 750,000/- ரூபா அல்லது அதனைவிட கூடுதலாக இருத்தல் அத்துடன் பின்வரும் மூன்று நிபந்தனைகளையும் பூர்திசெய்திருத்தல்.
- ஆகக்குறைந்தது நிறுவனத்தின் உரிமையில் 20 சதவீதம் பெண்களுக்கு உரியதாக இருத்தல்.
- உரிய நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் அல்லது பிரதான தொழிற்பாட்டு உத்தியோத்தர் பெண் ஒருவராக இருத்தல்.
- பணிப்பாளர் சபை உள்ள நிறுவனங்களில் குறித்த பணிப்பாளர் சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஆகக்குறைந்தது 30 சதவீதமாக இருத்தல்.
இதற்கமைவாக, ஊவா, சப்பிரகமுவ, வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய குறைவான அபிவிருத்தி பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கி, 10 நிதி நிறுவனங்களின் ஊடாக இந்த கடன்திட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.