2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மூன்று மாடிகளைக் கொண்ட புனர்வாழ்வு நிலையமொன்றை நிருமாணித்தல், உபகரணங்களை வழங்குதல் மற்றும் மூன்று வருட பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் - யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையானது இலங்கையிலுள்ள பிரதான மூன்றாம் நிலை சுகாதார சேவை நிலையமொன்றாவதோடு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பயிலுநர் பட்டதாரிகளுக்கு தேவையான மருத்துவ பயிற்சியினை வழங்குவதும் இதன் மூலமாகும். 2017 ஆம் ஆண்டில் இந்த வைத்தியசாலையில் 39,390 அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இவற்றுள் சுமார் 12,486 அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரான புனர்வாழ்வு பாதுகாப்பு தேவையான எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சைகளாகும். தரம் மிக்க புனர்வாழ்வு பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கு இந்த வைத்தியசாலையில் பௌதிக வசதிகளையும் பதவியினருக்கான பயிற்சிகளையும் மேம்படுத்த வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மூன்று மாடிகளைக் கொண்ட புனர்வாழ்வு நிலையமொன்றை நிருமாணிப்பதற்கும் இதன் பொருட்டு, உபகரணங்களை வழங்குவதற்கும் உரிய பதவியினரின் ஆற்றலை மேம்படுத்துவதற்கு மூன்று வருட கால பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. 605 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவில் உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |