2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சுகாதார முறைமை விரிவாக்கல் கருத்திட்டம் - ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி என்பவற்றின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுகாதார முறைமை விரிவாக்கல் கருத்திட்டத்தின் கீழ் வட மத்திய, மத்திய, சப்பிரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சுகாதார முறைமைகளை விருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் கீழும் உரிய மாகாண மட்டத்திலும் கருத்திட்ட முகாமைத்துவ பிரிவுகளை தாபிப்பதற்கும் இதற்கு தேவையான பதவியணியினரை ஆட்சேர்ப்பு செய்வதற்குமாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |