• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டமூலத்தை வரைதல்
- தற்காலத் தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீளாய்வு செய்து புதிய சட்டமொன்றை ஆக்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இது தொடர்பில் ஆராய்வதற்காக இந்த துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது, இந்த குழுவின் சிபாரிசின் அடிப்படையில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் புதிய குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் உள்வாங்கப்படவேண்டிய ஏற்பாடுகள் பற்றிய அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் மூலம் பிரேரிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை உள்ளடக்கி புதிய குடிவரவு, குடியகல்வு சட்டத்தை வரையும் பொருட்டு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்கு மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.