• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பியகம 220/33 kV, நெய்யரி (Grid) உபமின் நிலையத்தின் நிர்மாணமும் மேம்பாட்டுப் பணிகளும்
அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, பசுமை சக்தி அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பியகம 220/33 kV, நெய்யரி (Grid) உபமின் நிலையத்தின் நிர்மாணமும் மேம்பாட்டுப் பணிகளும் சார்பிலான ஒப்பந்தத்தை 1,434.11 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு M/s. ABB India Limited நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.