• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பொலிசின் புதிய கட்டடங்களின் நிருமாணிப்புக்கான மதியுரைச்சேவை முகவராண்மைகளை நியமித்தல்
புதிய கட்டடங்களின் நிருமாணம் சார்பிலும் தற்போதுள்ள கட்டடங்கள் தொடர்பான மேம்படுத்தல் மற்றும் புனரமைப்பு சார்பிலும் 1,000 மில்லியன் ரூபாவினை விஞ்சிய தொகையொன்று வருடாந்தம் இலங்கை பொலிசுக்கு ஒதுக்கப்படுகின்றது. 2018 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை பொலிசின் புதிய கட்டடங்களின் நிருமாண கருத்திட்டங்கள் சார்பில் மதியுரைச்சேவை முகவராண்மையொன்றை தெரிவு செய்யும் பொருட்டு பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சருமான ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திடமிருந்தும் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திடமிருந்து தேசிய கட்டடங்கள் திணைக்களத்திடமிருந்தும் உத்தேசிக்கப்பட்ட சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.