2018-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கைத்தொழில்களை தாபிப்பதற்காக பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல் பிராந்திய மட்டத்தில் கைத்தொழில்களை மேம்படுத்துவற்காக செயற்படும் பிராந்திய கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு பிராந்திய கைத்தொழில் சேவைக் குழுவினாலும் அமைச்சின் கருத்திட்ட மதிப்பிட்டுக் குழுவினாலும் பொருத்தமான முதலீட்டாளர்கள் தெரிவு செய்யப்படுவர். இதற்கமைவாக, கரந்தெனிய, பட்டஅத்த, நூராணி, புத்தளம், லக்ஷ உயன மற்றும் மட்டக்களப்பு ஆகிய கைத்தொழில் பேட்டைகளிலுள்ள வெற்றுக் காணித் துண்டுகளை கைத்தொழில்கள் ஆரம்பிக்கப்படுவதற்காக பொருத்தமான முதலீட்டாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு பத்திரிகை அறிவித்தல்கள் ஊடாக பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளன. இந்த கருத்திட்ட பிரேரிப்புகளிலிருந்து பிராந்திய கைத்தொழில் சேவைகள் குழுவினாலும் அமைச்சின் கருத்திட்ட மதிப்பீட்டுக் குழுவினாலும் சிபாரிசு செய்யப்படும் 8 கருத்திட்ட பிரேரிப்புகளுக்கு 35 வருடகால குத்தகை அடிப்படையில் உரிய காணித் துண்டுகளை குறித்தொதுக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |