• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலி மாவட்டத்தில் வௌ்ளப்பெருக்கினைத் தடுத்து இந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் உத்தேச கருத்திட்டம் சார்பில் சாத்தியத்தகவாய் வொன்றினை மேற்கொள்ளல்
காலி மாவட்டத்தில் வௌ்ளப்பெருக்கினைத் தடுத்து இந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நடைமுறைப்படுத்தவுள்ள உத்தேச கருத்திட்டத்தின் ஆரம்ப சாத்தியத்தகவாய்வு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சிடமிருந்தும் ஏனைய அரசாங்க நிறுவனங்களிடமிருந்தும் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தேவையான தரவுகளை உரிய நிறுவனங்களிடமிருந்து உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொள்ளும் பொருட்டு குறித்த ஆரம்ப சாத்தியத் தகவாய்வினை மேற்கொள்வதற்கு பணிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட MCC சருவதேச கம்பனிக்கு உத்தியோகபூர்வ கடிதமொன்றை வழங்குவதற்கும் இந்த சாத்தியத்தகவாய்வு சம்பந்தமான பணிகளை உரிய அமைச்சுக்களினதும் நிறுவனங்களினதும் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்வதற்குமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.