• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'1990 சுவசரிய மன்றம்' சட்டமூலத்தை சட்டமாக்குதல்
இந்திய அரசாங்கத்தின் மானிய வசதியின் கீழ் மேல் மற்றும் தென் மாகாணங்களில் தற்போது செயற்படுத்தப்பட்டுவரும் வைத்தியசாலைக்கு முன்னரான பாதுகாப்பு நோயாளர் காவு வண்டி (அம்பியூலன்ஸ்) சேவையினை அதேபோன்று ஏனைய மாகாணங்களுக்கும் விரிவாக்குவதற்கும் கூறப்பட்ட சேவையினை நிருவகிப்பதற்காக '1990 சுவசரிய மன்றத்தைத்' தாபிப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆதலால், இந்நோக்கத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை உள்ளடக்கி, சட்டவரைநரால் வரையப்பட்ட '1990 சுவசரிய மன்ற' சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொருட்டும் அதன்பின்னர் அதனை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.