2018-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை ஒருங்கிணைந்த தேசிய எல்லை முகாமைத்துவ திறமுறையை அமுல்படுத்துதல் இந்த நாட்டின் காவல் மற்றும் பாதுகாப்பை பயனுறுதிவாய்ந்த விதத்தில் பேணுவதற்கு தேசிய எல்லை பாதுகாப்பும் முகாமைத்துவமும் மிக முக்கியமாகும். விசேடமாக ஆட்களினதும் பொருட்களினதும் தேசிய எல்லைக்கு இடையிலான அதிகரித்த நகர்வுடன் மிக முக்கியமான விடயமாக இது மாறியுள்ளது. ஆதலால்,
தேசிய எல்லை முகாமைத்துவம் சார்பில் அரசாங்கத்திற்குள் பிரதான ஒருங்கிணைப்பு அமைப்பாக செயலாற்றும் பொருட்டு 2016 ஆம் ஆண்டில் தேசிய எல்லை முகாமைத்துவக்குழு தாபிக்கப்பட்டுள்ளது. சருவதேச நியமங்களுக்கு இணங்க நாட்டின் பயனுறுதி வாய்ந்த தேசிய எல்லை முகாமைத்துவமொன்றை தாபிக்கும் பொருட்டு தேசிய எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறுபட்ட இடை - முகவராண்மைகளின் பொறுப்புக்களையும் தொழிற்பாடுகளையும் இனங்கண்டு, முறைசார்ந்த ஒருங்கிணைந்த தேசிய எல்லை முகாமைத்துவ திறமுறை மற்றும் செயற்பாட்டுத்திட்டமொன்றை இக்குழு தயாரித்துள்ளது. அதற்கிணங்க, புலம்பெயர்தலுக்கான சருவதேச அமைப்பிற்கூடாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானிய உதவியின் கீழ் இத்திறமுறை மற்றும் செயற்பாட்டுத்திட்டத்தை அமுல்படுத்தும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |